ஆப்நகரம்

ரூ.100 கோடியில் புது பிசினஸ் செய்யும் நயன்தாரா

நயன்தாரா ரூ. 100 கோடி முதலீட்டில் புது தொழிலில் முதலீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Samayam Tamil 13 Jan 2022, 1:26 pm
நயன்தாராவின் புது பிசினஸ் பற்றிய தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
Samayam Tamil nayantharas business trip to dubai
ரூ.100 கோடியில் புது பிசினஸ் செய்யும் நயன்தாரா


நயன்தாரா

படங்களில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் நயன்தாரா. ரியல் எஸ்டேட்டில் பெரும் தொகையை போட்டிருக்கிறார். சாய்வாலா நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார். ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். லிப் பாம் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் புது தொழிலில் முதலீடு செய்யப் போகிறாராம்.

ரூ. 100 கோடி

புத்தாண்டை கொண்டாட தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்றார் நயன்தாரா. அது ஃபன்னுக்காக மட்டும் இல்லையாம், தொழிலுக்காகவும் தானாம். அதாவது துபாயில் எண்ணெய் வியாபாரத்தில் ரூ. 100 கோடி முதலீடு செய்யப் போகிறாராம் நயன்தாரா. அதற்காகத் தான் துபாய் விசிட்டாம்.

வியாபாரம்

நடிப்பை மட்டுமே நம்பி கடைசி வரை இல்லாமல், கிடைக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்து அதிகரிக்க முடிவு செய்துவிட்டாராம். இந்நிலையில் தான் எண்ணெய் வியாபாரம் குறித்து ஆலோசனை நடத்த துபாய் சென்றிருக்கிறார் நயன்தாரா.

காத்து வாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. அந்த படத்தின் ரிலீஸ் தேதிகிக்காக தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிப்ரவரி மாதம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்