சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டோரா' திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் நிதியுதவியில் இயக்குனர் சற்குணம் தயாரித்து வரும் 'டோரா' திரைப்படத்தை புதுமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். 'டோரா' படம், கார் ஒன்றை மையமாக வைத்து, அதற்குள் புகுந்திருக்கும் ஆவி செய்யும் அட்டகாசங்கள் திகில் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதை தன்னுடையது என அறிமுக இயக்குனர் சாட்டிலைட் ஸ்ரீதர் சர்ச்சையை கிளப்பினார். இந்த கதையை ஏற்கனவே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 'அலிபாபாவும் அற்புதக்காரும்' என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து 'டோரா' படத்துக்கு தடைக் கோரி சாட்டிலைட் ஸ்ரீதர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், 'டோரா' பட தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் வருகிற மார்ச் 24ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆரா சினிமாஸ் வாங்கியுள்ள இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Film producer Nemichand has directed to appear in court for Nayanthara's Dora on March 24.
பிரபல தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் நிதியுதவியில் இயக்குனர் சற்குணம் தயாரித்து வரும் 'டோரா' திரைப்படத்தை புதுமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். 'டோரா' படம், கார் ஒன்றை மையமாக வைத்து, அதற்குள் புகுந்திருக்கும் ஆவி செய்யும் அட்டகாசங்கள் திகில் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதை தன்னுடையது என அறிமுக இயக்குனர் சாட்டிலைட் ஸ்ரீதர் சர்ச்சையை கிளப்பினார். இந்த கதையை ஏற்கனவே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 'அலிபாபாவும் அற்புதக்காரும்' என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து 'டோரா' படத்துக்கு தடைக் கோரி சாட்டிலைட் ஸ்ரீதர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், 'டோரா' பட தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் வருகிற மார்ச் 24ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆரா சினிமாஸ் வாங்கியுள்ள இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Film producer Nemichand has directed to appear in court for Nayanthara's Dora on March 24.