ஆப்நகரம்

கன்னடத்தில் ரீமேக் ஆகும் நயன்தாராவின் சூப்பர்ஹிட் படம்! ஹீரொயின் இவர் தான்

நயன்தாரா, யோகி பாபு நடித்து இருந்த கோலமாவு கோகிலா படம் விரைவில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

Samayam Tamil 5 Aug 2020, 7:20 pm
நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் படம் கோலமாவு கோகிலா. 2018ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அறிவிக்கப்பட்ட போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது, அதற்கு காரணம் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் ரோலில் யோகி பாபு நடிக்க உள்ளார் என கூறப்பட்டது தான். மேலும் அதில் வரும் 'கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி' பாடலும் எதிர்பார்ப்பை கூட்டியது. அந்த படம் வெளிவந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து நல்ல வசூலும் ஈட்டியது.
Samayam Tamil Kolamavu Kokila


நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்த இந்தப் படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ளது. அந்த படம் பற்றிய தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. ரேடியோ ஜாக்கியாக இருந்து இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மயூரா ராகவேந்திரா தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். பிரபல சீரியல் நடிகை ரச்சிதா ராம் தான் நயன்தாரா நடித்த ரோலில் நடிக்க உள்ளார்.

தமிழில் நந்தினி சீரியலில் நடித்து இருந்த நித்யா ராமின் தங்கை தான் ரச்சிதா ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலமாவு கோகிலா ரீமேக் பற்றி பேசி இருக்கும் இயக்குனர், "இது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் உரிமைக்காக நாங்கள் லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த டீல் முடிந்த பிறகு தான் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளோம். அப்போது தான் தயாரிப்பாளர், படக்குழு மற்றும் நடிகர்கள் பற்றிய விவரம் வெளியிடப்படும்" என்று அவர் கூறியிருக்கிறார். இந்த படம் இயக்குனர் மயூராவின் இரண்டாவது படம். அவர் இதற்கு முன்பு இயக்கிய Kannad Gothilla என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ரச்சிதா ராம் உடன் மயூரா இதற்கு முன்பு ஒரு படத்தில் பணியாற்றி இருக்க வேண்டியது, ஆனால் அந்த படம் சில காரணங்களால் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரச்சிதா ராம் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். வீரம், லில்லி, ஏப்ரல் மற்றும் டாலி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ரமேஷ் அரவிந்தின் 100 படம் தான்.

கோலமாவு கோகிலா படத்தின் கதை தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. பணம் இல்லையென்றாலும் மானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக கிடைக்கும் வேலைகளில் தொல்லைகளை தாண்டியும் பணியாற்றிக் கொண்டிருப்பவர் கோகிலா (நயன்தாரா). அந்த நேரத்தில் அவரது அம்மாவுக்கு கேன்சர் இருப்பது தெரிய வருகிறது. உடனே அதிக பணம் கொண்டு வந்தால் அவரது உயிரை காப்பாற்றி விடலாம் என்கிற நிலை. ஆனால் அவரது அப்பா செக்கியூரிட்டி வேலை செய்பவர், தங்கை கல்லூரியில் படிக்கிறார். அதனால் 15 லட்சம் பணம் உடனே எப்படி ரெடி செய்வது என விழித்து கொண்டு இருப்பார் கோகிலா. அந்த நேரத்தில் தான் போதை பொருள் கடத்தல் உலகத்திற்குள் நுழையும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அதன் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என எண்ணிய அவர் அதன் மூலமாக பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகிறார். அதிக எல்லாம் தாண்டி கோலமாவு (போதை பொருள்) மூலமாக பணம் கொண்டு வந்து தன் தாய் உயிரை காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதையாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்