ஆப்நகரம்

ஓமைகாட் நயன்தாராவுமா?: யார் எல்லாம் எதிர்க்கப் போறாங்களோ

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Aug 2020, 2:23 pm
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக அம்மனாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். அந்த படத்தில் நடித்தபோது நயன்தாரா அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் மூக்குத்தி அம்மன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
Samayam Tamil nayanthara


இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து ஒரு முன்னணி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருக்க விரும்பவில்லையாம்.

இந்த தகவலை படக்குழு இதுவரை உறுதி செய்யவில்லை. ஆனால் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் வெளியாகுமா என்று ஆர்.ஜே. பாலாஜியிடம் முன்பு கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, மூக்குத்தி அம்மன் கண்டிப்பாக தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப்படும். தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருப்போம் என்றார். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போவதாக கூறப்படுகிறது.

இந்த தைரியத்தில் தான் சூர்யா ஓடிடிக்கு போயிருக்கார்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதை பார்த்த தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கோபம் அடைந்தனர்.

இது தியேட்டர்களை நிரந்தரமாக மூடச் செய்யும் வழி என்றார்கள். இந்நிலையில் நயன்தாராவின் படமும் ஓடிடியில் வெளியாகப் போகிறதாம். முன்னதாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தான் லாக்டவுனின்போது முதன்முதலாக ஓடிடியில் வெளியான தமிழ் படம் ஆகும்.

படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்குமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்தார்.

தியேட்டர்களை திறந்தாலும் கொரோனா வைரஸுக்கு பயந்து மக்கள் படம் பார்க்க வருவார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஒவ்வொரு படமாக ஓடிடியில் வெளியாகி வருகிறது.

லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் அவர் வழக்கறிஞராக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நடித்தார். 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அந்த படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தான் தயாரித்து வருகிறார்.

இது தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்