சினிமாவில் தனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என நடிகை நீது சந்திரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘யாவரும் நலம்’, ‘ஆதி பகவன்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நீது சந்திரா. அப்படங்களுக்கு பின் தமிழில் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. பாலிவுட் சென்றும் அங்கும் எந்த வாய்ப்பும் சொல்லும்படி இல்லை.
இந்நிலையில் வேதனையுடன் கூறிய நடிகை நீதுசந்திரா, “என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். 4 வருடத்திற்கு முன் எனது தந்தையை இழந்துவிட்டேன். எனவே, எனது குடும்பத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். அனால், துரதிஷ்டவசமாக எனக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனது திறமைகளும் கவனிக்கப்படவில்லை. என்னை வழிநடத்த சரியான ஆள் இல்லை. நான் எந்த தயாரிப்பாளருடனும், இயக்குனருடனும் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன்” என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழில் ‘யாவரும் நலம்’, ‘ஆதி பகவன்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நீது சந்திரா. அப்படங்களுக்கு பின் தமிழில் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. பாலிவுட் சென்றும் அங்கும் எந்த வாய்ப்பும் சொல்லும்படி இல்லை.
இந்நிலையில் வேதனையுடன் கூறிய நடிகை நீதுசந்திரா, “என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். 4 வருடத்திற்கு முன் எனது தந்தையை இழந்துவிட்டேன். எனவே, எனது குடும்பத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன்.