ஆப்நகரம்

நவம்பர் வெளியீட்டுக்கு தயாராகும் 'நெஞ்சம் மறப்பதில்லை'

செல்வராகவன் இயக்கத்தில் திகில் கலந்த பேய் படமாக உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் நவம்பர் மாத வெளியீட்டிற்காக தயார் நிலையில் உள்ளது.

TNN 6 Oct 2016, 5:02 pm
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் திகில் கலந்த பேய் படமாக உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் நவம்பர் மாத வெளியீட்டிற்காக தயார் நிலையில் உள்ளது.
Samayam Tamil nenjam marappathillai aims for november 11th release
நவம்பர் வெளியீட்டுக்கு தயாராகும் 'நெஞ்சம் மறப்பதில்லை'


சமீபத்தில் இப்படத்தின் இறுதி பதிவை பார்த்த இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் நாயகனான எஸ்.ஜே.சூர்யாவை 'ராக்ஸ்டார்' என புகழ்ந்து பதிவிட்டிருந்தார். இறுதிக்கட்ட பணியில் உள்ள இப்படத்தை வருகிற நவம்பர் 11ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஒருவேளை திட்டமிட்டப்படி நவ.11ஆம் தேதி வெளியிடாமல் போனால், நவ.18ஆம் தேதி வெளியிட படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக புரொடக்ஷன்' தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கஸான்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்