ஆப்நகரம்

அஜித் எப்படிபட்டவர் தெரியுமா? இதை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாது: ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தல அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். என்ன கூறியுள்ளார் பாருங்க.

Samayam Tamil 31 Mar 2020, 11:08 am
கொரோனா காரணமாக தற்போது இந்தியா முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். சினிமா துறையும் முழுமையாக முடங்கியுள்ளது.
Samayam Tamil Ajith in Nerkona Paarvai


சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வீடுகளில் தனிமையிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்துவது, உடற்பயிற்சி செய்வது, நடனம் ஆடுவது என பல்வேறு விஷயங்களை செய்து அதை சமூக வலைதங்களில் வீடியோக்கள் புகைப்படங்கள் என தொடர்ந்து பதிவிட்டுவளர்கின்றனர்.

மேலும் சில நடிகர் நடிகைகள் ரசிகர்களுடன் நேரடியாகவே உரையாடி வருகின்றனர். அப்படி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் தன் ரசிகர்களுடன் லைவ் வீடியோ சேட்டில் உரையாடினார்.

அப்போது அவரிடம் சிலர் தல அஜித்துடன் பணியாற்றியது பற்றி கேட்டுள்ளனர். அதற்கு பதில் கூறிய அவர், "அஜித் மிகவும் அன்பானவர், எப்போதும் அடுத்தவர்களுக்கு மதிப்பு கொடுத்து மென்மையாக பேசக்கூடியவர். நான் பார்த்தத்திலேயே மிகப்பெரிய ஜென்டில்மேன் என்றால் அது அஜித் தான்."

"அவருடன் ஒன்றாக ஷூட்டிங்கில் செலவழித்த நாளை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன்" என கூறியுள்ளார் அவர்.


அஜித் வழக்கறிஞராக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் மூன்று பெண்களில் ஒருவராக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கியிருந்தார். தற்போது தமிழில் மாறா, சக்ரா ஆகிய படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் ஃபான்டோம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்