ஆப்நகரம்

அசோக் செல்வன் பற்றி கேட்ட நெட்டிசனுக்கு பிரகதி பொளேர்

அசோக் செல்வன் பற்றி தன்னிடம் கேட்டவருக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் பாடகி பிரகதி.

Samayam Tamil 30 Sep 2020, 6:42 pm
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். தற்போது அவர் படங்கள் மற்றும் ஆல்பங்களில் பாடி வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டே அவர் பாட்டு பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
Samayam Tamil ashok selvan


பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை பார்த்த பிரகதி தான் அசோக் செல்வனை காதலிக்கவில்லை என்று அண்மையில் தான் விளக்கம் அளித்தார். நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் தற்போது கல்லூரியில் படித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் கெரியர் மற்றும் படிப்பின் மீது உள்ளது. தற்போது நான் திருமணம் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார் பிரகதி.

அவர் விளக்கம் அளித்த பிறகும் பிரகதியும், அசோக் செல்வனும் காதலிக்கிறார்களாம் என்று பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில் பிரகதி இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதை பார்த்த ஒருவர், அசோக் செல்வன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.

அந்த கமெண்ட்டை பார்த்த பிரகதியோ, அவரை தான் கேட்கணும் என்று தெரிவித்துள்ளார்.

தனக்கும், அசோக் செல்வனுக்கும் இடையே எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கவே பிரகதி இப்படி நெத்தியடி கொடுத்துள்ளார். அசோக் செல்வன் அவர் பாட்டுக்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் பிரகதி சட்டை மட்டும் அணிந்து கடற்கரையில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். அதை பார்த்தவர்கள், பிரகதி காசுக்காக மாடலிங் என்கிற பெயரில் உடலை காட்டுகிறார், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என்று எல்லாம் பேசினார்கள்.

இதை பார்த்த பிரகதியோ, நான் குடிப்பழக்கத்திற்கு அடிமை இல்லை என்று விளக்கம் அளித்தார். பிரகதி பாடல்கள் பாடுவது தவிர்த்து மாடலிங்கும் செய்து வருகிறார்.

திரையுலகில் சம்பந்தமே இல்லாத இரண்டு பேருக்கு இடையே காதல் இருப்பதாக பேசப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth சாலையில் கிடந்த ரூ. 2 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த ரஜினியின் ஏழை ரசிகன்

அடுத்த செய்தி

டிரெண்டிங்