ஆப்நகரம்

அது வேற வாய், இது வேற வாய்: விஜய் சேதுபதியை விளாசும் நெட்டிசன்ஸ்

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதியை சமூக வலைதளவாசிகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 28 Oct 2021, 4:06 pm
தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதியை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil netizens criticise vijay sethupathi for receiving national award
அது வேற வாய், இது வேற வாய்: விஜய் சேதுபதியை விளாசும் நெட்டிசன்ஸ்


விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை ஷில்பாவாக நடித்து அசத்திய விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 25ம் தேதி டெல்லியில் நடந்த தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து விருதை பெற்றார் விஜய் சேதுபதி. அவர் விருதுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அதை பார்த்த ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்விட்டார்கள்.

தேசிய விருது

சமூக வலைதளவாசிகளோ, விஜய் சேதுபதியை விளாசுகிறார்கள். மத்திய அரசு எனக்கு தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி நடந்த கருப்பன் பட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் விஜய் சேதுபதி. அதை நினைவில் வைத்து தான் விளாசுகிறார்கள்.

மத்திய அரசு

நீட் தேர்வு கொடுமை, நவோதயா பள்ளிகள் மூலம் இந்தி திணிப்பு என தமிழர்களுக்கு விரோதமான சூழலில் மத்திய அரசு உங்களுக்கு தேசிய விருது கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று கருப்பன் பட செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, இப்பொழுது தான் நீட் தேர்வுக்கு ஒரு உயிரை பறிகொடுத்திருக்கிறோம். இந்த சூழலில் எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டால் அதை பெற்றுக்கொள்ள மாட்டேன். எனக்கு விருதை விட மக்களின் உணர்வு தான் முக்கியம் என்றார்.

தமிழர்கள்

2017ம் ஆண்டு கூறினாலும் தற்போதும் அதே ஆட்கள் தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு விரோதமான சூழல் தான் தொடர்ந்து நிலவுகிறது. அப்படி இருக்கும்போது விஜய் சேதுபதி, தான் சொன்னதை மறந்துவிட்டு விருது வாங்கிவிட்டார் என்று அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்