ஆப்நகரம்

வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா: பெற்றோர் மீது கேஸ் போட்ட விஜய்யை விளாசும் நெட்டிசன்ஸ்

தன் அப்பா, அம்மா மீதே வழக்கு தொடர்ந்த விஜய்யை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 20 Sep 2021, 9:26 am

ஹைலைட்ஸ்:

  • பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த விஜய்
  • விஜய் விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Vijay
தன் பெயரையோ, தன் ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறி அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா உள்பட 11 பேர் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் விஜய். அந்த வழக்கு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அப்பா, அம்மா மீது கேஸ் போட்ட விஜய்: 27ம் தேதி விசாரணைஇது குறித்து அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் விஜய்யை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வழக்கு குறித்த தகவல் அறிந்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

நல்ல குடும்பம். படங்களில் மட்டும் தான் விஜய் பெருசா வசனம் பேசுகிறார். நிஜத்தில் ஒன்றும் இல்லை. அப்பா மீதே வழக்கு போடுகிறார்.

தன்னை ஒரு பெரிய ஆளாக்கிவிட்ட அப்பாவையே காமெடி பீஸாக்கி அனைவரிடமும் வசை வாங்க வைத்துவிட்டார் விஜய்.
என் வீட்டு கன்னுகுட்டி என்னோட மல்லுகட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி கண்மணி. அப்பா சரி, அம்மா மீது எதற்காக வழக்கு தொடரணும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஜய் அப்பாவை பற்றி பெருமையாக பாடிய பாடலை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைத்து அத்துடன் புகாரின் நகலையும் வெளியிட்டு இப்படி பண்றாரே எந்று அவரின் ரசிகர்கள் சிலரே தெரிவித்துள்ளனர்.

விஜய்க்கும், தனக்கும் இடையே பிரச்சனை இருப்பது உண்மை தான் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எஸ்.ஏ. சந்திரசேகர் தன் பட விழாவில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்