ஆப்நகரம்

என்னை தற்கொலையில் இருந்து காப்பாற்றியது நெட்டீசன்கள்தான்: நடிகை கஸ்தூரி!

தற்கொலை எண்ணத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியவர்கள் நெட்டீசன்கள்தான் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Aug 2018, 5:27 pm
தற்கொலை எண்ணத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியவர்கள் நெட்டீசன்கள்தான் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
Samayam Tamil kasthuri1


நடிகை கஸ்தூரி 1990களில் பிரபல நடிகையாக இருந்தார். அவர் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்றவர். பின்னர் அவர் பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் நடிகை கஸ்தூரி திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்தோடு செட்டிலானார்.

கடந்த மூன்று வருடங்களாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல்வேறு சமூக பிரச்னையில் கலந்து கொண்டு அதற்கு தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி நண்பர்கள் தின வாழ்த்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். மேலும், அதில் ‘‘2 வருடங்களுக்கு முன்பு எனது வாழ்க்கை மிக மோசமாக இருந்தது.

எனது நண்பர்கள் மட்டும் தான் எனக்கு துணையாக இருந்தனர் என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடரந்து பதிவிட்ட அடுத்த ட்விட்டில் தன்னை தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டதில் நெட்டீசன்களுக்கு பெரும் பங்கு உண்டு’’ என்று கூறியிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்