ஆப்நகரம்

இப்ப எதுக்கு விஜய் பெயரை இழுக்கிறீங்க?: வனிதாவிடம் மல்லுக்கட்டிய ரசிகர்கள்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடர்பான வனிதாவின் ட்வீட்டில் விஜய் பெயரை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.

Samayam Tamil 27 Sep 2020, 4:30 pm
கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருந்து வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Samayam Tamil vanitha vijayakumar


இந்நிலையில் பலரும் எஸ்.பி.பி.யை பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே வனிதா விஜயகுமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மலரே மௌனமா பாடலை எனக்காக பாடுமாறு நான் விஜய்யை பல முறை கேட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் ஒரு மாதிரியா லுக் விடுவார். ஏனென்றால் நான் அந்த அளவுக்கு அவரை நச்சரித்திருக்கிறேன். இருப்பினும் அவர் எனக்காக அந்த பாடலை பாடினார்...#SPBalasubrahmanyam என்று தெரிவித்துள்ளார்.

அந்த ட்வீட்டை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதாவது,

நீங்கள் போட்டிருக்கும் ட்வீட்டுக்கும், விஜய்ணாவுக்கும் என்ன சம்பந்தம்?. அவருடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்துவிட்டு நீங்கள் பண்ணும் அலப்பறை தாங்க முடியவில்லை.

உங்களுக்காக விஜய் பாடினார் என்பதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு?. சும்மா இஷ்டத்திற்கு அடித்துவிட வேண்டாம். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை என்றால் அமைதியாக இருக்கவும் என்று கூறியுள்ளனர்.

தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு சென்று எஸ்.பி.பி.யின் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார். மேலும் சரணுக்கும் ஆறுதல் கூறினார். விஜய்யை பார்க்க ரசிகர்கள் முந்தியடித்தனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தன் செருப்பை தவற விட்டார். அதை பார்த்த விஜய் அந்த செருப்பை எடுத்து ரசிகரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

விஜய்யின் இந்த செயல் அவர் ரசிகர்களை மட்டும் அல்லாமல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல பிரபலங்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. இந்நிலையில் விஜய் அஞ்சலி செலுத்தியதை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவரை பாராட்டியுள்ளனர். அவர் மீதான மதிப்பும், மரியாதையும் மேலும் அதிகரித்துள்ளதாக கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்