திருமணம்
சின்னத்திரை நடிகையான மகாலக்ஷ்மி, லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு சச்சின் என்ற மகன் பிறந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
நடிகருடன் காதல்
பின்னர் மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மகாலக்ஷ்மி, சீரியல் நடிகர் ஈஸ்வர் என்பவருடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவியான டிவி நடிகை ஜெய்ஸ்ரீ குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது. இதையடுத்து ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்தார் மகாலக்ஷ்மி.
Bigg Boss 6: நம்மதான் அந்த லிஸ்ட்ல இல்லயே... எப்படி கூப்பிடுவாங்க... புலம்பும் சீரியல் நடிகர்!
இரண்டாவது திருமணம்
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ரவீந்தரும் ஏற்கனவே விவாகரத்தானவர் என்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருவரும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மகாலக்ஷ்மி பணத்தின் மீது உள்ள நோக்கத்தால்தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்தன.
சம்பளம்
ஆனால் தான் மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதால் தான் பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்யவில்லை என்ற பதிலடி கொடுத்தார் மகாலக்ஷ்மி. இருப்பினும் அவர்கள் என்ன செய்தாலும் அதனை ட்ரோலாக்குவதையும் விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.
திடீரென 'அந்த போட்டோக்களை' நீக்கிய மகாலட்சுமி!
கண் இல்லையா?
அந்த வகையில் மகாலக்ஷ்மி தனக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார் ரவீந்தர். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடவுளே உனக்கு கண் இல்லையா? என்றும் 90ஸ் கிட்ஸின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளாதீர்கள் என்றும் சாடி வருகின்றனர். மேலும் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்கும் நெட்டிசன்ஸ், இந்த போட்டோக்களையெல்லாம் ஏன் ஷேர் செய்கிறீர்கள் என்றும் விளாசி வருகின்றனர்.