ஆப்நகரம்

நல்லா இருந்த விஜய் பாவம், இப்படி ஆகிட்டாரே: மரணமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

தந்தையர் தினத்தை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 22 Jun 2020, 4:23 pm
தந்தையர் தினத்தை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா தன் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்தினார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிவிட்டது. காரணம் விஜய் தேவரகொண்டா தன் தலைமுடியை நீளமாக வளர்த்துள்ளதுடன், கோட்டி எல்லாம் வைத்து பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறார்.
Samayam Tamil vijay deverakonda


திடீர் என்று பார்த்தால் இது விஜய் தேவரகொண்டா தானா என்கிற சந்தேகம் எழுவதாக பலரும் தெரிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் கெட்டப்பை பார்த்த சமூக வலைதளவாசிகள் லாக்டவுனில் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கலாய்த்ததுடன், மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா லாக்டவுனால் பாவம் நல்லா இருந்த விஜய் தேவரகொண்டா இப்படி ஆகிவிட்டாரே என்று சமூகவலைதளவாசிகள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

இது என்ன லுக் அண்ணா?. திடீர் என்று பார்க்க சீனாக்காரர் மாதிரி இருக்கிறீர்கள். இந்த கெட்டப் நன்றாக இல்லை. தயவு செய்து ஹேர்கட் செய்து, அந்த கோட்டியை ஷேவ் செய்யுங்கள். பல நாட்கள் சாப்பிடாத நபர் போன்று தெரிகிறீர்கள். இந்த கெட்டப் வேண்டாம் அண்ணா, உங்களுக்கு செட் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதோ,
கொரோனா வைரஸால் பாவம் விஜய் தேவரகொண்டா இப்படி ஆகிவிட்டார். மெக்சிகோ டிரக் டீலர் போன்று இருக்கிறார் விஜய். ஃபைட்டர் படத்தில் நீங்கள் இந்த கெட்டப்பில் தான் வருகிறீர்கள் என்றால் அதை நாங்கள் பார்க்க மாட்டோம். இப்படியே ஷூட்டிங்கிற்கு சென்றால் ஹீரோயின் பயந்து ஓடிவிடப் போகிறார் என்று கூறியுள்ளனர்.

லாக்டவுனுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா புரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஃபைட்டர் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்திற்காகத் தான் இப்படி கெட்டப்பை மாற்றினாரா இல்லை லாக்டவுனால் இப்படி ஆகிவிட்டாரா என்பது தெரியவில்லை.

ஃபைட்டர் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபைட்டர் படம் மூலம் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். மும்பையில் ஃபைட்டர் ஷூட்டிங் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதற்கிடையே விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. அதை இருவருமே கண்டுகொள்ளவில்லை. ஃபைட்டருக்காக விஜய் தேவரகொண்டா தாய்லாந்துக்கு சென்று தற்காப்பு கலை பயிற்சி மேற்கொண்டார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படம் பிளாப் ஆனது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து விஜய் ஃபைட்டர் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் துடித்தார். இந்நிலையில் தான் ஃபைட்டர் படம் இந்தியிலும் வெளியாக உள்ளது. லாக்டவுன் எப்பொழுது முடியும், ஃபைட்டர் ஷூட்டிங் எப்பொழுது துவங்கும் என்று காத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

இதற்கிடையே சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தொடர்பாக சமூக வலைதளவாசிகள் பலர் கரண் ஜோஹாரை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்