ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டில் தவறு செய்பவர்களுக்கு சிறை தண்டனை!

பிக்பாஸ் வீட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சிறை போன்று செட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.

Samayam Tamil 14 Jun 2018, 3:54 pm
பிக்பாஸ் வீட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சிறை போன்று செட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.
Samayam Tamil Bigg-Boss-House-Tamil


பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதேபோல் தற்போது பிக்பாஸ் 2வது சீசனும் களைகட்ட ஆரம்பித்து விட்டது. இந்த வாரம் ஞாயிறன்று தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக 60 கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்களும், தண்டனைகளும் காத்திருக்கின்றதாம்.

ஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் தவறு செய்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாம். அதற்காக வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்