ஆப்நகரம்

‘சர்கார்-3’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

எழுத்தாளர் தரவேண்டிய சம்பள பாக்கியால் ‘சர்கார்-3’ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

TNN 21 Mar 2017, 4:44 pm
எழுத்தாளர் தரவேண்டிய சம்பள பாக்கியால் ‘சர்கார்-3’ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
Samayam Tamil new problem with sarkar 3 movie
‘சர்கார்-3’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்!


அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, நடிகர் அமிதாப் பச்சானை வைத்து இந்தியில் இயக்கிய படம் ‘சர்கார்-3’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஏப்ரல் 7ம் தேதி தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தார் ராம் கோபால் வர்மா. ஆனால் தற்போது படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய எழுத்தாளர் நீலேஷ் கிரிகர் தனது சம்பள பாக்கியை ராம் கோபால் வர்மா இன்னும் செட்டில் செய்யவில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கின் விசாரணையின் போது ராம் கோபால் வர்மா ரூ.6.2 லட்சம் நீதிமன்றத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

அதுவரை இப்படத்தின் சிறப்பு வெளியீட்டை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கிரிகர் அவரது வழக்கறிஞருக்கு ‘சர்கார்-3’ படத்தை திரையிட்டுக் காட்டவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் முழு திரைக்கதையின் நகலை கிரிகர் மற்றும் நீதிமன்றத்திடம் ராம் கோபால் வர்மா சமர்பித்தாக வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பினை பொருத்தே ‘சர்கார்-3’ படத்தின் ரிலீஸ் தேதி அமையும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்