ஆப்நகரம்

மருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித் மற்றும் ஷாலினி: வைரலாகும் வீடியோ

நடிகர் தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மருத்துவமனை செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

Samayam Tamil 22 May 2020, 6:59 pm
நடிகர் அஜித்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் ரசிகர் ம்ன்றங்களை களைத்து ரசிகர்களை, மீடியாவை சந்திப்பதை நிறுத்தினாலும் அவரை பற்றி ஒரு சின்ன விஷயம் வெளியானால் கூட அதை சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டாக்கி விடுவார்கள்.
Samayam Tamil Ajith and Shalini in Hospital


தற்போது அஜித் தனது மனைவி உடன் மருத்துவனையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது கொரோனா அதிகம் பரவி வருகிறது என்பதால் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மாஸ்க் அணிந்து சென்றுள்ளனர். இதனால் என்ன ஆனது என தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

அஜித்தின் மனைவி ஷாலினிக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர் என கூறப்படுகிறது.

அந்த மருத்துவமனையில் பணியாற்றும் யாரோ ஒருவர் தான் அந்த வீடியோவை மொபைலில் ஷூட் செய்துள்ளார் என தெரிகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..


அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அதில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார் என்பது தயாரிப்பாளர் முன்பே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. அதனை தொடர்ந்து சென்னை திரும்பிய படக்குழு இங்கு ஒரு பிரபல ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடத்தியது. ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பும் போது அஜித் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக்கில் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தார் என செய்திகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

வலிமை படத்தின் ஷூட்டிங் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. லாக் டவுன் முடிந்து அரசு சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்த பிறகு தான் அது மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குனர் ஹெச். வினோத் வலிமை படத்தின் முக்கிய சண்டை காட்சிகளை ஸ்பெயின், மொரோக்கோ உள்ளிட்ட வெளி நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது. தீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ராஜஸ்தானில் பாலைவனத்தில் எடுத்து போல வலிமை கிளைமேக்ஸை வெளிநாட்டில் எடுக்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக அந்த நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் இனி அந்த காட்சிகளை இந்தியாவிலேயே எடுக்கப்போகிறாரா அல்லது காத்திருந்து வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்துவார் ஹெச்.வினோத் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்