ஆப்நகரம்

விசாகப்பட்டினம் செல்லும் 'சபாஷ் நாயுடு' படக்குழு

உலகநாயகன் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

TNN 16 Aug 2016, 5:39 pm
சென்னை: உலகநாயகன் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Samayam Tamil next schedule of sabaash naidu in vizag
விசாகப்பட்டினம் செல்லும் 'சபாஷ் நாயுடு' படக்குழு


இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு கமல்ஹாசன் எதிர்பாரதவிதமாக வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

தற்போது, கமல்ஹாசன உடல்நலம் தேறி வருவதாகவும், ஜிம்மிற்கு சென்று உடற்ப்பயிர்ச்சிகள் மேற்கொண்டு நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கிடப்பில் போட்டு வைத்துள்ள சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2வது வாரத்தில் இருந்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், சவ்ரப் சுக்லா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்