ஆப்நகரம்

அந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடாது: நான் தப்பு பண்ணிட்டேன்: வருத்தப்பட்ட சாய் பல்லவி!

நான் தப்பு பண்ணிட்டேன் என்றும், அந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடாது என்றும் நடிகை சாய் பல்லவி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Jun 2019, 7:52 am
நான் தப்பு பண்ணிட்டேன் என்றும், அந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடாது என்றும் நடிகை சாய் பல்லவி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sai


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக கஸ்தூரி மான் என்ற படத்தில் பள்ளி மாணவியாகவும், தாம் தூம் படத்தில் செண்பாவின் உறவினராகவும் நடித்திருந்தார். இரு படங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை. மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த பிரேமம் படம் சென்னையில் 259 நாட்கள் வரை திரையரங்கில் வெற்றிநடை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழில் முதன் முதலில் நடித்த தியா படம் அவருக்கு தோல்விப்படமாக முடிந்தது. இப்படத்தைத் தொடர்ந்து மாரி 2 மற்றும் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துவிட்டார். மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரௌடி பேபி பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய வரலாற்று சாதனை படைத்துவிட்டது. அதே போன்று என்ஜிகே படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது.

இதற்கிடையில், அண்மையில், இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தியா படத்தில் நடித்திருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன். இந்தப் படத்தில் நடிக்கும் அளவிற்கு எனக்கு அப்போது பக்குவம் வரவில்லை என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்