ஆப்நகரம்

லாக்டவுனுக்கு மத்தியில் சத்தமில்லாமல் நடக்கும் பெரிய இடத்து நடிகர் திருமணம்

முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலின் திருமணம் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும் நாளை நடக்கவிருக்கிறது.

Samayam Tamil 16 Apr 2020, 10:04 am
முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் தாத்தா தேவ கவுடா, அப்பா வழியில் அரசியலில் ஈடுபட்டுள்ளார். அதே சமயம் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஜாகுவார் படம் மூலம் நிகில் நடிகர் ஆனார்.
Samayam Tamil nikhil


நிகிலுக்கும், ரேவதி என்கிற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தையே அமர்க்களப்படுத்திவிட்டார்கள். ஏப்ரல் 17ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகராவில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்தார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிகில், ரேவதி திருமணத்தை தள்ளிப் போடவில்லை. குறித்த தேதியில், தேர்வு செய்த இடத்தில் திருமணத்தை நடத்துகிறார்கள். ஆனால் இந்த திருமணத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொள்கிறார்களாம்.

இதுவரை பத்திரமா இருக்கோம்: கைக்குழந்தையுடன் அமெரிக்காவில் இருந்து நடிகை விளக்கம்

ராமநகராவில் இருக்கும் பண்ணை வீட்டில் நிகில், ரேவதி திருமணத்தை நடத்துகிறார்களாம். திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறதாம்.

ஜோதிடர்களிடம் அறிவுரை கேட்ட பிறகே குறித்த தேதியில் திருமணம் நடக்க உள்ளதாம். லாக்டவுன் எல்லாம் முடிந்த பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்களாம்.

நாளை திருமணம் என்பதால் இரு வீட்டாரும் படுபிசியாக இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்