ஆப்நகரம்

இப்படி நடிக்க எனக்கு வரல: தெறித்து ஓடிய நிஷா!

இப்படி நடிக்க எனக்கு சரிப்பட்டு வராததால் தான் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று நடிகை நிஷா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Mar 2018, 5:20 pm
இப்படி நடிக்க எனக்கு சரிப்பட்டு வராததால் தான் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று நடிகை நிஷா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nisha 2


வீடுகளில் மக்களை ஆட்சி செய்வது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். அப்படி, சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்த தொலைக்காட்சிகள் பல உள்ளன. அந்த வகையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலும் ஒன்று. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில், அமித் பார்கவ், நிஷா, சரண்யா என்ற மூவரும் முக்கிய நடிகர்களாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சீரியலில் இருந்து தற்போது நிஷா வெளியேறிவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ஆரம்ப முதலே இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் நல்லவிதமாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், அதற்கு எதிர்மறையான வேடமாகத்தான் எழுத்தாளர்கள் அமைக்கிறார்கள். அவர்களை நான் குறை கூறவில்லை. தனக்கு இப்படியொரு வேடத்தில் நடிக்க எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால், இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ganesh Venkatram's wife and popular actress Nisha Krishnan has stepped out of a serial, Nenjam Marappathillai, that she was all the while part of.

அடுத்த செய்தி

டிரெண்டிங்