ஆப்நகரம்

அனுஷ்கா பிரச்சனை செய்வதாக பரவிய வதந்தி: படக்குழு விளக்கம்

நிசப்தம் படத்தினை நேரடியாக OTTயில் ரிலீஸ் செய்ய அனுஷ்கா தடையாக இருக்கிறார் என பரவிய செய்திக்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Apr 2020, 4:33 pm
பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்கா பாகமதி என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். எந்த புதிய படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன் உடல் எடையை குறைக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என கூறப்பட்டது.
Samayam Tamil Anushka Shetty


அதன் பிறகு தற்போது நிசப்தம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அனுஷ்கா. இந்த படத்தில் மாதவன், அஞ்சலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்று மாதம் இதன் ட்ரைலர் வெளிவந்து அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஏப்ரல் 2ம் தேதி நிசப்தம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணாமாக அரசு ஊரடங்கு ஆணை பிறப்பித்ததால் நிசப்தம் பட ரிலீஸ் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் லாக்டவுன் முடியும் வரை காத்திருக்காமல் இந்த படத்தினை நேரடியாக OTT தளங்களில் வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் பரிசீலித்து வருவதாகவும், ஆனால் அதற்கு அனுஷ்கா தான் தொடர்ந்து தடையாக இருக்கிறார் என செய்திகள் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என படக்குழு விளக்கம்அளித்துள்ளது. இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

"முதல் நாளில் இருந்து இன்று வரை அனைத்து நடிகர்கள், குறிப்பாக அனுஷ்கா ஷெட்டி, மற்றும் டெக்னீசியன்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். எதாவது மாற்றங்கள் என்றால் நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்" என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்