ஆப்நகரம்

மூன்றே வாரங்களில் ‘பிராணா’ படத்தை முடித்த நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன், மூன்று வாரங்களில் ‘பிராணா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Samayam Tamil 11 Sep 2018, 1:52 pm
நடிகை நித்யா மேனன், மூன்று வாரங்களில் ‘பிராணா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Samayam Tamil nithya


நடிகை நித்யா மேனன் தற்போது நடித்துள்ள படம் ‘பிராணா’. இந்தப் படத்திற்கு மூன்று வாரங்கள் கால்ஷீட் கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். இந்தப் படத்தை வி.கே. பிரகாஷ் இயக்கி வருகிறார். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடிக்கவுள்ளார் நித்யா மேனன்.

இதில் ‘பிராணா’ படத்தின் கதைக்களம் ஒரே ஒரு கேரக்டரை சுற்றி நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதாம். த்ரில்லரை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படம் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் உருவாகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்ததுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை வெறும் மூன்று வாரங்களில் நிறைவு செய்து வியக்க வைத்துள்ளார் நித்யா மேனன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்