ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் தான் ஆர்டர் செய்து டெலிவரியான சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடந்ததாக புகைப்படத்துடன் போட்டோ வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிர் பிடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இதேபோல் தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது விரட்ட பர்வம், பாகை, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேடஸில் அவர் பகிர்ந்துள்ள செய்தி ஒன்று பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
அதில், ஸ்விக்கி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக கரப்பான் பூச்சியுடன் கிடைந்த உணவின் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
மேலும், "ஸ்விக்கி நிறுவனம் மற்றும் உணவங்கள் என்ன தரத்தை தற்போது பின்பற்றுகின்றன என தெரியவில்லை. இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன். இத்தகைய உணவகங்களில் தினமும் சோதனை நடத்தி , தரமாக இல்லையென்றால் அதிக அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி செய்துவரும் நிலையில், தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும்” என்றும் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிர் பிடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இதேபோல் தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது விரட்ட பர்வம், பாகை, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேடஸில் அவர் பகிர்ந்துள்ள செய்தி ஒன்று பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
அதில், ஸ்விக்கி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக கரப்பான் பூச்சியுடன் கிடைந்த உணவின் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
மேலும், "ஸ்விக்கி நிறுவனம் மற்றும் உணவங்கள் என்ன தரத்தை தற்போது பின்பற்றுகின்றன என தெரியவில்லை. இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன். இத்தகைய உணவகங்களில் தினமும் சோதனை நடத்தி , தரமாக இல்லையென்றால் அதிக அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி செய்துவரும் நிலையில், தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும்” என்றும் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.