ஆப்நகரம்

நிவேதா உட்பட நான்கு பேருடன் டூயட் பாடவுள்ள துல்கர்!

துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படத்தில் நிவேதா பெத்துராஜ் உட்பட நான்கு பேர் ஹீரோயினிகளாக நடிக்கவுள்ளனர்.

Samayam Tamil 21 Apr 2018, 6:33 pm
துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படத்தில் நிவேதா பெத்துராஜ் உட்பட நான்கு பேர் ஹீரோயினிகளாக நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil dulquer-salman


நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் போலீசாக நடித்து வருகிறார். அடுத்ததாக துல்கருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். நடிகர் துல்கர் சல்மான் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். அடுத்ததாக துல்கர், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நான்கு பேர் நடிக்கவுள்ளனர். இதில் ஒரு நாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் துல்கர் ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் மற்றும் ஷாலினி பாண்டேவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான ‘திமிரு பிடிச்சவன்’, ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்