ஆப்நகரம்

கோயில் புகைப்படச் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ்!

பிரபல தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ், கோயில் புகைப்பட சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார்.

Samayam Tamil 21 Mar 2019, 3:41 pm
‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்தப் படத்தை அடுத்து தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil nivetha-pethuraj


சமீபத்தில் அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் எடுத்த சில புகைப்படங்களை தற்போது அவர் சமூக வலைதளங்களில்ல் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது.

பொதுமக்கள் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் சோதனைக்கு பிறகு தான் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நடிகை நிவேதா பெத்துராஜ் மட்டும் எப்படி செல்போன் எடுத்துச்சென்றார் என பலரும் தற்போது கேள்வி கேட்டு வருகின்றனர்.

சினிமா நடிகை என்றால் அவருக்கு சலுகை உண்டா? என்ற விமர்சனமும், கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்