நடிகர் நிவின்பாலி முதன் முதலாக இரு வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
நடிகர் நிவின்பாலி தமிழில் ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். தற்போது அவர் மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படம் ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடியில் இறங்கி நடித்துள்ளார். தற்போது நிவின்பாலி ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார்.படத்தின் பெயர் ‘ஞங்களுட நாட்டில் ஓரிடவேள’. இந்தப் படத்தை அல்தாப் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே ‘பிரேமம்‘ படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிவின்பாலி தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆஹானா கிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
நடிகர் நிவின்பாலி தமிழில் ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். தற்போது அவர் மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படம் ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடியில் இறங்கி நடித்துள்ளார். தற்போது நிவின்பாலி ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார்.படத்தின் பெயர் ‘ஞங்களுட நாட்டில் ஓரிடவேள’. இந்தப் படத்தை அல்தாப் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே ‘பிரேமம்‘ படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிவின்பாலி தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆஹானா கிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.