ஆப்நகரம்

பெற்றோரின் ஆசைக்காக 2 வருடம் வேலை செய்த நிவின்பாலி!

நிவின்பாலி தனது பெற்றோர்களின் ஆசைக்காக 2 வருடம் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.

TNN 8 Dec 2017, 6:21 pm
நிவின்பாலி தனது பெற்றோர்களின் ஆசைக்காக 2 வருடம் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.
Samayam Tamil nivin pauly worked for 2 years for parents desire
பெற்றோரின் ஆசைக்காக 2 வருடம் வேலை செய்த நிவின்பாலி!


மலையாள திரையுலகில் இன்று இளம் முன்னணி கதாநாயனாக இருந்து வருபவர் நடிகர் நிவின்பாலி. இன்று இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிச்சி’ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் மூலம் தமிழிலும் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடிவு செய்துவிட்டார் நிவின்பாலி.


சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் நிவின்பாலி, சினிமாவுக்குள் தான் எப்படி வந்தேன் என்பது பற்றி கூறினார். நிவின்பாலி சினிமாவில் நடிக்க வேண்டும் என கூறியவுடன் அவரது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்தனராம். ஆனால் நிவின்பாலி பிடிவாதமாக இருக்கவே, அவரது மனதை மாற்றும் விதமாக இரண்டு வருடங்கள் வேறு ஏதாவது வேலைக்கு சென்று அனுபவங்களை பெறுமாறு கூறினர். அதன்பின் வேண்டுமானால் சினிமாவுக்குள் நுழையலாம் என்றும் கூறினார்களாம்..

ஆனால் சரியாக இரண்டு வருடம் கழிந்ததும் ஒருநாள் கூட தாமதிக்காமல் வேலையை ராஜினமா செய்துவிட்டு பெற்றோர் முன் வந்து நின்றாராம். சினிமா மீது அவர் கொண்டுள்ள தீவிர பக்தியைக் கண்டு வேறுவழியின்றி பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்