ஆப்நகரம்

Nerkonda Paarvai: இன்னும் போனியாகாததால் தயாரிப்பாளர் மீது கடும் கோபத்தில் தல அஜித்!!

ஆக்ஸ்ட் 8 அன்று நேர்கொண்ட பார்வை படம் வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் மீது வியாபாரம் சம்பந்தமாக அஜித் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Samayam Tamil 24 Jul 2019, 1:33 pm
தல அஜித்குமார் நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் “பிங்க்” அந்தப்படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் “நேர் கொண்ட பார்வை. முழுக்க பெண்ணியப் படமாக பெண்களின் சுதந்திரத்தையும் , உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண் மீதுநிலவும் பாலியல் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசிய படம் தான் பிங்க்.
Samayam Tamil boney 2.


நீ ஒரு வயசு குழந்தையாக இருக்கும் வரை உன்ன தூக்கி கொஞ்சியிருக்கிறேன்: சத்யராஜ்!

முழுக்க பெண்கள் மிக முக்கியப் பாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் அமிதாப் சிறிய நேரமே வரக்கூடிய முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியான ஒரு படத்தில் தமிழின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் நடித்திருப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமே. இதற்கு முழுக்காரணம்நடிகை ஶ்ரீதேவி தான். ஶ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தது முதல் அஜித்துடன் நல்ல நட்பில் இருந்தவர் ஶ்ரீதேவி. அஜித்தை வைத்து தமிழில் தான் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது அவர் ஆசை. அவர் தான் பிங்க் படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவரது திடீர் மரணத்திற்கு பிறகு போனிகபூர் அஜித்திற்காக பிங்க் படத்தின் உரிமையை தமிழில் வாங்கினார்.

Aadai: தியேட்டருக்கு சென்று தனக்குத் தானே விமர்சனம் கேட்ட அமலா பால்: வைரலாகும் வீடியோ!


இந்திப்படம் போல் இல்லாமல் தமிழ்ப் படத்தின் அஜித்தின் கேரக்டர் அதிக நேரம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் ஆக்‌ஷன் கலந்ததாக உருவாக்கபப்ட்டுள்ளது. வித்தியாபாலன் அஜித் ஜோடியாக நடித்துள்ளார். கல்கி கொச்சிலின், ஸ்ரதா ஶ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பண்டேஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ரிலீஸ் ஆக்ஸ்ட் 10 என்று முன்பு கூறப்பட்ட நிலையில் படம் ஆகஸ்ட் 8 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
Aadai: பிறக்கும் போது டிரெஸ்ஸோடவா பிறந்தோம் - அமலாபால் அதிரடி!!

இப்படத்தின் விநியோகவியாபாரம் தொடங்கிய நாளிலிருந்தே பிரச்சனைகளும் அதையொட்டிய வதந்திகளும் சினிமா உலகை சுற்றி வருகின்றன. தல அஜித் சினிமா வராலாற்றில் மிகப்பெரிய வசூலைத் தந்த படம் விஸ்வாசம் தான் விவேகம் படம் சரியாக போகததால் அந்த தயாரிப்பாளருக்கு அடுத்த பட்த்தையும் தந்தார் அஜித். தன் பட வியாபரங்களில் வசூலில் அஜித் தலையீடு செய்வதில்லை. அப்படி இருப்பவர் இப்படத்தின் வியாபார சிக்கல்கள் கேள்விப்பட்டு கோபாமாகியுள்ளாராம்.

நேர் கொண்ட பார்வையில் அஜித் சின்ன வேடத்தில் தோன்றுவதால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வந்தனர். தயாரிப்பாளர் போனிகபூர் விஸ்வாசம் படத்தை விட அதிக விலை சொல்வதாக விநியோகஸ்தர்கள் கூறி வந்தனர். விஸ்வாசம் படம் தான் அஜித் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம். ஆனால் அதன் விலையை விட அதிக விலை கூறுவதாலும், அஜித் படத்தில் சிறிது நேரமே வருவதாலும் படம் போனியாவதில் பிரச்சனை நீடித்தது. ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் தமிழகத்தில்சில ஏரியாக்கள் விற்கப்படவில்லையாம். ஆனால் போனிகபூர் சொன்ன விலையிலிருந்து இறங்கியே வரவில்லையாம்.

கடைசி நிலவரப்படி தமிழக உரிமை 55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது. ஆனால் படத்தின் விற்கப்படாதசில ஏரியாக்களை பட நிறுவனமே சொந்தமாக வெளியிடுவதாக தெரிகிறது. இது ஒரு விழிப்புணர்வு படமாக கதைக்கு முக்கியத்துவம கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இது கமர்ஷியல் படம் இல்லை என்பதால் வசூலில் பிரச்சனை வந்தால் தன் பெயர் கெடுமே என தயாரிப்பாளர் மீது கடுப்பில் இருக்கிறாராம் அஜித். போனிகபூரின் அடுத்த படத்திலும் அஜித் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்