ஆப்நகரம்

மறுபடியும் முதலில் இருந்தா?: சமந்தா பாவம்யா

சமந்தா சுமார் இரண்டு வாரங்களாக ட்விட்டர் பக்கமே வரவில்லை. இதையடுத்து மறுபடியும் அதே பேச்சு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 7 Apr 2020, 6:39 pm
சமந்தா சுமார் இரண்டு வாரங்களாக ட்விட்டர் பக்கமே வரவில்லை. இதையடுத்து மறுபடியும் அதே பேச்சு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil not again poor samantha
மறுபடியும் முதலில் இருந்தா?: சமந்தா பாவம்யா



சமந்தா

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தான் பொழுதை கழிக்கிறார்கள். ட்வீட் செய்வது, இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவது, ரசிகர்களுடன் சாட் செய்வது என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். ஆனால் சாதாரண நாட்களிலேயே ட்விட்டரில் ஓவர் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவை மட்டும் ஆளேயே காணவில்லை.

கர்ப்பம்

சமந்தா ட்விட்டர் பக்கம் வந்து சுமார் 2 வாரங்கள் ஆகிறது. இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ஒரு வாரம் ஆகிறது. இதையடுத்து சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள். ஏம்பா, நாட்டில் எம்புட்டு பிரச்சனை இருக்கு, இப்ப சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பது தானா முக்கியம் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

பாவம்

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகப் போகிறது. இதையடுத்து தான் சமந்தா கர்ப்பம் என்று அவ்வப்போது தகவல் வெளியாகிறது. இதை பார்க்கும் சமந்தா தான் கர்ப்பமாக இல்லை என்று விளக்கம் அளிக்கிறார். கர்ப்பம் குறித்து மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்து சமந்தா டயர்டாகிவிட்டார் போன்று. இந்நிலையில் தான் மீண்டும் அதே கர்ப்ப விஷயம் பற்றி பேசப்படுகிறது.

குழந்தை

சமந்தா புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்தும் விலகினார். இதையடுத்து தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக எழுந்த பேச்சு இன்னும் அடங்கவில்லை. எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தானும், நாக சைதன்யாவும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக சமந்தா முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்