ஆப்நகரம்

அநியாய சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

தான் அதிகமாக சம்பளம் கேட்பதாக வெளியான தகவல் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்திருக்கிறார். கதை நன்றாக இருந்தால் சம்பளத்தை அட்ஜஸ்ட் செய்ய தயாராக இருக்கிறார்.

Samayam Tamil 27 Jul 2021, 3:28 pm
எனக்கு பணம் முக்கியம் இல்லை, ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil not money but script matters aishwarya rajesh
அநியாய சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்?


ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவப்பாக இல்லாத, அதிலும் குறிப்பாக தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளால் கோலிவுட்டில் வெற்றி பெற முடியாது என்கிற பேச்சு உள்ளது. இந்நிலையில் தான் கஷ்டப்பட்டு முன்னேறி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வித்தியாசமான மற்றும் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சம்பளம்

தற்போது கை நிறைய படங்கள் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகம் சம்பளம் கேட்பதாக தகவல் வெளியானது. இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, எனக்கு சம்பளம் முக்கியம் இல்லை. நல்ல கதையாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ள நான் தயங்குவதே இல்லை. என் படங்களை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

ஹீரோயின்

ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் கூறியதாவது, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தவிர்த்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திட்டம் இரண்டு படத்தில் நான் போலீஸாக நடித்திருக்கிறேன். என் படங்கள் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்று ஆசை தான். ஆனால் தற்போது இருக்கும் நிலையில் அது சாத்தியம் இல்லை என்றார்.

படங்கள்

ஹீரோயினை மையமாக கொண்ட தி கிரேட் இந்தியன் கிட்சன் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அவர் கையில் தற்போது மூன்று தெலுங்கு படங்கள், நான்கு தமிழ் படங்கள் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்