ஆப்நகரம்

என்னது ஷகிலா எனக்கு லவ் லெட்டர் கொடுத்தாங்களா? அப்படிலாம் இல்லங்க - தயாரிப்பாளர் மறுப்பு!

மலையாள திரையுலகின் தயாரிப்பாளர் மணியன்பிள்ள ராஜூ, தனக்கு ஷகிலா காதல் கடிதம் கொடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Mar 2019, 5:59 pm
தென்னிந்தியாவின் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. தற்போது சென்னையில் செட்டிலாகி குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தனது ஏற்பட்ட காதல் விவகாரம் குறித்து சமீபத்தில் மனம் திறந்தார்.
Samayam Tamil Shakeela


அதாவது, 2007ஆம் ஆண்டு மணியன்பிள்ள ராஜூ தயாரிப்பில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சோட்டா மும்பை’. இதில் ஷகிலாவும் நடித்திருந்தார். அப்போது தனது தாயாரின் சிகிச்சைக்காக பணம் புரட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

அப்போது தனக்கு பேசப்பட்ட மொத்த சம்பளத்தையும் முன்கூட்டியே தயாரிப்பாளர் மணியன்பிள்ள ராஜூ வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் மீது ஒருவிதமான காதல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலை ஒரு கடிதம் மூலம் அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை.

இதையடுத்து அந்த நிகழ்வை மறந்துவிட்டு, தனது பணிகளைத் தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதிலளித்துள்ள மணியன்பிள்ள ராஜூ, ஷகிலாவிற்கு முன்கூட்டியே அவரது சம்பளத்தைக் கொடுத்தது உண்மை தான்.

ஆனால் அவர் காதல் கொண்டுள்ளார். அதற்காக எனக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதெல்லாம் தெரியாது. எனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை. இதுவரை காதலை வெளிப்படுத்தும் வகையில், அவர் நடந்து கொள்ளவே இல்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்