ஆப்நகரம்

பிரபல மலையாள திரைப்பட கதாசிரியர் டி.ஏ.ரசக் காலமானார்

பிரபல மலையாள திரைக்கதாசிரியர் டி.ஏ.ரசக் நேற்று இரவு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

TNN 16 Aug 2016, 10:50 am
சென்னை: பிரபல மலையாள திரைக்கதாசிரியர் டி.ஏ.ரசக் நேற்று இரவு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Samayam Tamil noted malayalam script writer ta rasaq passes away on monday night
பிரபல மலையாள திரைப்பட கதாசிரியர் டி.ஏ.ரசக் காலமானார்


கடந்த சில வாரங்களாவே கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த ரசக் சிகிச்சை பலனின்றி காலமானார். உதவி இயக்குநராக திரையுலகில் அறிமுகமான ரசக், பின்னர் திரைக்கதை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

கடந்த 1991ஆம் ஆண்டு, கமல் இயக்கத்தில் உருவான 'விஷ்ணுலோகம்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான ரசக், சுமார் 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

கானகினவு, ஆயிரத்தில் ஒருவன், பெருமழாக்கலாம் உள்ளிட்ட படங்களுக்காக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இதேபோன்று, ரப்பக்கள், பஸ் கண்டக்டர், வேஷம் நாடோடி, கசல், தாலோளம், சினேகம், சபாலாயம் உள்ளிட்ட படங்களின் திரைக்கதைக்கு சொந்தக்காரர் ஆவார்.

கொண்டோட்டியில் உள்ள மோயின்குட்டி வைத்தியர் நினைவு மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ரசக்கின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் ஜும்மா மசூதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசக்கின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ரசக்கின் மறைவு மலையாள திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு' என இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்