ஆப்நகரம்

வார கடைசியில இப்படி பண்ணாதீங்க.. ரித்திகா சிங் புகைப்படத்திற்கு விஷ்ணு விஷால் கமெண்ட்

ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படத்திற்கு விஷ்னு கமெண்ட் செய்துள்ளார். என்ன கூறியுள்ளார் பாருங்க.

Samayam Tamil 15 Jun 2020, 1:52 pm
நடிகை ரித்திகா சிங் எப்போதும் ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் செலுத்தி உடற்பயிற்சி செய்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தவர் என்பதால் அவர் உடர் பயிற்சி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
Samayam Tamil Vishnu Vishal and Ritika Singh


தற்போது கைவசம் பாக்சர் என்ற படத்தை வைத்திருக்கும் ரித்திகா சிங், கொரோனா லாக் டவுனில் வீட்டிலேயே அதிகம் உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரித்திகா சிங் தான் கேக் சாப்பிடும் போட்டோ என்று பதிவிட்டுள்ளார்.

"என் மூளை க்ரஞ்சஸ் செய்யவேண்டும் என சொல்கிறது. ஆனால் என் வயிறு அதை கேக் என ஆட்டோ கரெக்ட் செய்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். சாக்லேட் மீது அதிக விருப்பம் இருப்பதையும் இந்த பதிவில் ரித்திகா சிங் கூறியுள்ளார்.

View this post on Instagram My brain said crunches but my stomach auto corrected it to cake xD #chocoholic A post shared by Ritika Singh (@ritika_offl) on Jun 13, 2020 at 8:32am PDT

இதற்கு பதில் கொடுத்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் காமெடியாக ஒரு விஷயத்தை பேசியுள்ளார். "இப்போது எங்களையும் இந்த வாரக்கடைசியில் தூண்டி விடாதே. நாங்களும் கடைசியில் கேக் சாப்பிடும்படி ஆகிவிடும்" என அவர் கூறி உள்ளார்.

மேலும் தான் ரித்திகா சிங் கடைசியாக நடித்த ஓ மை கடவுளே படத்தை பார்த்ததாகவும் அது தனக்கு அதிகம் பிடித்திருந்தது என்றும் கூறி இருந்தார் அவர். “சிறப்பாக நடித்து இருந்தீர்கள்.. அசோக் செல்வன் மற்றும் அனைவரும்” என விஷ்னு கூறியுள்ளார்.

விஷ்னு விஷாலின் இந்த கமென்ட்டுக்கு பதில் கூறிய நடிகை ரித்திகா சிங், ”ஹா ஹா.. நான் சமீப காலமாக அதிகம் சாக்லெட்டுகளை சாப்பிட்டு வருகிறேன். நன்றி. படம் உங்களுக்கு பிடித்து இருந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என் பதில் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்து இருந்த ஓ மை கடவுளே படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தயில் வரவேற்பை பெற்றது. அஸ்வத் மாரிமுத்து என்பவர் அதனை இயக்கி இருந்தார். ரித்திகா சிங் மற்றும் அசோக் செல்வன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா என ரித்திகா சிங் எந்த யோசனையும் இன்றி ஒப்புக்கொள்வார். ஆனால் திருமணத்திற்கு பின்பு அவருடன் ரொமான்ஸ் செய்ய முடியாமல் இருக்கிறார். பின்னர் சண்டை இட்டு விவாகரத்து வரை செல்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தான் படம் காட்டி இருக்கும்.

ரசிகர்களிடம் இதற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. ரித்திகா சிங் நடிப்பையும் பலர் பாராட்டினர். அவரை அப்படத்தில் நூடுல்ஸ் மண்டை என்று தான் அசோக் செல்வன் அழைப்பர். அந்த பெயரும் அதிகம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரித்திகா சிங் அடுத்து பாக்சர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதில் MMA சண்டை போடுபவராகவே ரித்திகா நடித்துள்ளார். அருண் விஜய்க்கும் அதே கதாபாத்திரம் தன. MMA சண்டை கற்றுக்கொள்ள அருண் விஜய் வெளிநாட்டுக்கு சென்று பயிற்சி எடுத்து வந்தார். ஆனால் ரித்திகா இளம் வயதில் இருந்தே அதை கற்றுக்கொண்டவர் என்பதால மிக எளிதாக இந்த அப்படத்தில் நடித்து உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்