ஆப்நகரம்

ஓணம் பண்டிகை அன்று பீப் சாப்பிட்ட நடிகையால் ரசிகர்கள் கொந்தளிப்பு

ஓணம் பண்டிகையின் போது மாட்டுக்கறி சாப்பிட்ட நடிகையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

TNN 9 Sep 2017, 7:00 pm
ஓணம் பண்டிகையின் போது மாட்டுக்கறி சாப்பிட்ட நடிகையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil on the onam festival the fans were upset by the beep eating actress
ஓணம் பண்டிகை அன்று பீப் சாப்பிட்ட நடிகையால் ரசிகர்கள் கொந்தளிப்பு


மின்னமினுங்கு என்ற மலையால படத்திற்காக தேசிய விருது வாங்கியவர் சுரபி. இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனக்கு பிடித்தமான விஷயங்கள் பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். இதுவே அவருக்கு வினையாக மாறியுள்ளது.



ஆம், அந்த பேட்டியை அவர் ஓணம் பண்டிகைக்கு இரண்டு வாரத்திற்கு முன்னரே கொடுத்துள்ளார். ஆனால், அந்த பேட்டியை அந்த தொலைக்காட்சி ஓணம் பண்டிகையின் போது ஒளிபரப்பு செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சுரபி தான் வழக்கமாக செல்லும் ஹோட்டலுக்கு சென்று பீப் சாப்பிட்டுள்ளார். மேலும், சுரபி தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் அசைவம் சாப்பிடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், ஓணம் பண்டிகையின் போது பீப் சாப்பிடுகிறார் என்று சுரபி பற்றி சமூக வலைதளங்களில் கருத்தி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்