ஆப்நகரம்

கருப்பு கண்ணாடி அணிந்து நடிக்கும் ஹீரோக்களுக்கு நடிப்பே வராது: ராதா ரவி!

சினிமாவில் கருப்பு கண்ணாடி அணிந்து நடிக்கும் ஹீரோக்களுக்கு நடிப்பே வராது என்று பிரபல நடிகர் ராதாரவி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2019, 1:36 pm
சினிமாவில் கருப்பு கண்ணாடி அணிந்து நடிக்கும் ஹீரோக்களுக்கு நடிப்பே வராது என்று பிரபல நடிகர் ராதாரவி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
Samayam Tamil radha


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராதா ரவி. இவர் ஒரு அரசியல்வாதியும் கூட. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி இவர் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறிவிட்டு பின்னர் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்பார்.

அண்மையில், நடந்த கொலையுதிர் காலம் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதாரவி, நயன்தாராவை பற்றி அவதூறாக பேசி சிக்கலில் சிக்கினார். பின் தான் பேசியது தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்றுகூறினார்.

இந்நிலையில் பட விழா ஒன்றில் பங்கேற்ற ராதாரவி, பேசுகையில் ‘‘சினிமாவில் வரும் கதாநாயன்கள் எப்பொழுதும் கருப்பு கண்ணாடி போட்டு நடிக்காதீர்கள். எப்பையாவது போடலாம். ஆனால் எப்பொழுதும் போட்டு நடிப்பவர்களுக்கு நடிப்பு சுத்தமாக தெரியாது என்று தான் அர்த்தம்.

நடிகர் கமல்ஹாசனை பாருங்கள், அவரை எனக்குப் பிடிக்காது தான். ஆனால் அவர் படத்தில் எங்கு கண்ணாடி போட வேண்டுமோ அங்கு மட்டும் தான் கண்ணாடி போடுவார். அதனால் தான் அவர் சினிமாவில் இன்றும் உச்சத்தில் இருக்கிறார் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்