ஆப்நகரம்

விஜய் சேதுபதி படம் மீண்டும் கேன்சல்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சிந்துபாத் படம் நாளை வெளியாக இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக திரைக்கு வந்தாலும், காலை காட்சி ரத்து செய்யப்பட்டு 11 மணிக்கு தான் படம் திரையிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jun 2019, 12:54 pm
விஜய் சேதுபதி நடித்துள்ள 'சிந்துபாத்' படம் ஜூன்21 அன்று ரிலீஸாவதாக இருந்தது. பாகுபலி படத்தை எடுத்த ஆர்கா மீடியா நிறுவனத்திற்கும் சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே புரடக்சன் ராஜராஜ்னுக்கும் இருந்த பணப்பிரச்சனையால் படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்தது.
Samayam Tamil indhu


ஆர்கா மீடியா நிறுவனம் ஹைதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடுக்க ஹைதரபாத் நீதிமன்றம் சிந்துபாத் படத்தை வெளியிட தடை விதித்தது. இரண்டு தயாரிப்பளர்களும் பிரச்சனையை பேசிய தீர்க்க நினைத்த நிலையில் ஆர்கா மீடியா நிறுவனம் தங்கள் பணத்தை செட்டில் செய்யக் கூறியது.

சிந்துபாத் திரைப்படம் இயக்குநர் எஸ் அருணகுமாருடன் இணைந்துள்ள மூன்றவது படமாகும். பனனையாரும் பத்மினியும் , சேதுபதி படங்க்களுக்கு பிறகு இப்படம் வெளியாவதால் ரசிகரகள் எற்றிபார்ப்பில் இருந்தனர். மேலும் இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியின் மகன்சூர்யா ஒரு முக்கியப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தன் மகன் முதன்முதலில் நடித்த படம் பிரச்சனையில் சிக்கியதில் மனமுடைந்தார். அவர் தன் சம்பளத்தில் இருந்து ஒரு கோடியை விட்டுத்தந்தார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்க்கர் ராஜா ஒரு கோடியை விட்டுக்க கொடுக்க பிரச்சனை முடிவுக்கு வந்தது. பிரச்சனை தீர்த்த பிறகு வரும் ஜூன் 28ம் தேதி சிந்துபாத் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். "பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்" என கோரிக்கை விடுத்தார்.

இதனால் படத்தை ஒரு நாள் முன்னதாக இன்று படக்குழு ரிலீஸ் செய்தது. இந்நிலையில் படத்தின் காலைக்காட்சி 8 மணிக்கு நடைபெறுவதாக இருந்த சில டெக்னிகல் பிரச்சனைகளால் படம் திரையிடப்படாமல்கேன்சல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 11 மணிக்காடசி திரையிடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. காலைக் காட்சியை ஆவலுடன் பார்க்க வந்த ரசிகரகள் ஏமாற்றாத்துடன் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்