ஆப்நகரம்

தனுஷ் எங்களுடைய மகன் தான்: மதுரை தம்பதியினர் மீண்டும் புகார்!

தனுஷ் எங்களுடைய மகன் தான் என்று மதுரை தம்பதியினர் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

TNN 4 Sep 2017, 5:03 pm
தனுஷ் எங்களுடைய மகன் தான் என்று மதுரை தம்பதியினர் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Samayam Tamil once again madurai couples complained about dhanush in madurai branch highcourt
தனுஷ் எங்களுடைய மகன் தான்: மதுரை தம்பதியினர் மீண்டும் புகார்!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் தங்களுடைய மகன் என்று, சிறு வயதிலேயே வீட்டைவிட்டு சென்றுவிட்டதாகவும் ஏற்கனவே மதுரை கதிரேசன் மற்றும் மீனாட்ஷி தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில், தனுஷ் மதுரை கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கில் கஸ்தூரி ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் தனுஷிற்கு சாதகமாக இருந்ததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், விசாரணைக்கு சமர்பிக்கப்பட்ட தனுஷின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆதாரங்கள் போலியானவை. அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்