ஆப்நகரம்

பாலியல் சீண்டலில் தப்பிக்க இதுபோதுமாம்...நடிகையின் யோசனை!

ஆண்கள் கொடுக்கும் பாலியல் சீண்டல்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு ஒரு முத்தம் கொடுத்தாலே போதும் என்று பிரபல நடிகை பாப்ரி கோஷ் யோசனை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Nov 2018, 5:01 pm
சினிமா துறையில் நடிகை, நடிகர்கள் பலர் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த குற்றங்களில் இருந்து தப்பிக்க பிரபல நடிகை பாப்ரி கோஷ் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil நடிகை பாப்ரி கோஷ்
நடிகை பாப்ரி கோஷ்


சின்னத்திரை உலகில் மிகப் பிரபல டிவி தொடரான, நாயகியில் கண்மணி எனும் கதாப்பதிரத்தில் நடித்து பிரபலமானவர் பாப்ரி கோஷ். இவர் அளித்த பேட்டி ஒன்றில் மீட்டூ’ பற்றியும், சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்தும் பதிலளித்துள்ளார்.

“என் அனுபவத்தில் அப்படியொரு சீண்டல்களை நான் சந்தித்ததில்லை. நான் நடித்து வரும் நாயகி தொடரின் குழுவில் நான் பாதுகாப்பாகவே உணர்கிறேன். பாலியல் சீண்டல்கள் குறித்து உங்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் மட்டும் பேசுங்கள். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தால் அவர்களுக்கு ஒரே ஒரு முத்தம் கொடுங்கள். அதாவது அவர்களது மனைவி, குழந்தையின் முன்பு, மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்