ஆப்நகரம்

இந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக்? யாரு செஞ்ச வேல?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 9:17 pm
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 3ஆவது படம் பிகில். இதற்கு முன்னதாக தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு ஹிட் படங்கள் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2ஆவது லுக் போஸ்டர், 3ஆவது லுக் போஸ்டர் என்று அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்தனர்.
Samayam Tamil ar rahman

Verithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்!

கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். நயன்தாரா பிசியோதெரபி மாணவியாக நடித்துள்ளார். இதையடுத்து, ஒரு முக்கியமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில், முதன் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கபெண்ணே என்ற பாடல் சமூக வலைதளங்களில் லீக்கானது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் இது போன்று நிகழாது என்று தயாரிப்பு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
புதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்களே: விஜய் தேவரகொண்டா!

சிங்கபெண்ணே பாடல் லீக்கானது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இது ஓய்வதற்குள் படக்குழுவினருக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம், இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் லீக்காகியுள்ளது. ஆனால், உண்மையில், அது வெறித்தனம் பாடல்தானா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், அந்தப் பாடல் ஹேய் புள்ள, பக்கம் வா மெல்ல, என்னை நீ கொல்ல மிச்சம் மீதி இல்ல…என்ற மெலடி பாடலின் வரிகள் இருப்பது போல் தெரிகிறது.
Rajinikanth Salary: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாளர்கள்!

சரி, எது எப்படியிருந்தாலும் இந்தப் பாடலை கம்போஸ் செய்யும் போது, இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் என்று இந்த 4 பேர் மட்டுமே இருப்பார்கள். அப்படியிருக்கும் போது இந்தப் பாடல் எப்படி லீக்காகியிருக்க முடியும். இதுவே படப்பிடிப்பு தளம் என்றால், அங்கு கேமராமேன், டெக்னீசியன்கள், படக்குழுவினர், நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள், ரசிகர்கள் என்று பலரும் கூடியிருப்பார்கள். அதுகூட லீக்காகிவிட்டது என்று சொன்னால், அதில், யாரேனும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டார்கள் என்று கூறிவிடலாம்.

ஆனால், யாருமே இல்லாமல், 4 பேர் மட்டுமே இணைந்து கம்போஸ் செய்யும் ஒரு பாடல் எப்படி லீக்காகியிருக்க முடியும் என்பது பலரது கேள்வி. எது எப்படியோ, இது குறித்து படக்குழு தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்