ஆப்நகரம்

முதலில் பிரபுதேவா, இப்போ விக்கி, அடுத்து...: நயன்தாரா ராசி அப்படி

தலைப்பை பார்த்து நீங்கள் ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

Samayam Tamil 10 Jun 2020, 3:25 pm
இலவச விளம்பரம் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். படங்களில் சர்ச்சைக்குரிய வசனங்களை வைத்து இலவச விளம்பரம் தேடும் டிரெண்ட் உருவானது. சர்ச்சையாக பேசி விளம்பரம் தேடும் ஆட்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் நயன்தாராவுக்கு மட்டும் எப்பொழுது பார்த்தாலும் இலவச விளம்பரம் கிடைக்கிறது.
Samayam Tamil nayanthara


நயன்தாராவும், இயக்குநரும், டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான பிரபுதேவாவும் காதலித்து பிரிந்தது அனைவருக்கும் தெரியும். காதல் முறிவுக்கு பிறகு பிரபுதேவாவும், நயன்தாராவும் ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாரா பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

முன்னதாக பிரபுதேவா விஷால் மற்றும் கார்த்தியை வைத்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்கினார். 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை வேறு நடிகர்களை வைத்து பிரபுதேவா இயக்குகிறார் அதில் தான் நயன்தாரா நடிக்கிறார் என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷோ, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை தற்போதைக்கு எடுக்கும் ஐடியா இல்லை. நயன்தாரா பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை என்றார்.

பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் நடிக்கிறார் என்று வெளியான தகவலால் நயன் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருந்தார். அந்த பேச்சு அடங்குவதற்குள் நயன்தாராவை பற்றி அடுத்த வதந்தி கிளம்பி அது தீயாக பரவி அவருக்கு இலவச விளம்பரம் கிடைத்தது.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் விரைவில் கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. அந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. திருமண தகவல் குறித்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுத்தது.
அடுத்ததாக நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஹீரோ நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். சும்மாவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி பேசுவார்கள். இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணினால் சொல்லவா வேண்டும். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

காதலர்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து பணியாற்றப் போவதாலேயே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கை வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்க்கத் தான் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்