ஆப்நகரம்

சாதனை படைத்த “ஒத்த செருப்பு”உள்ளூரில் மதிப்பில்லை - பார்த்திபன்

உள்ளூரில் வியாபாரத்தில் தோல்வி கண்ட ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியூரில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 23 Aug 2019, 12:39 pm
தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சிக்கு பெயர் போன நடிகர் பார்த்திபன் தனது அடுத்த முயற்சியாக தான் ஒருவர் மட்டுமே நடித்து எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் “ஒத்த செருப்பு”. இப்படத்தில் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே முழுப்படத்திலும் வரும்படி இப்படம் உருவாகியுள்ளது.
Samayam Tamil Oththa Seruppu Size 7


இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். ஒலிக்கலவையை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வெளிவரும் முன்பே ஒரு உலக சாதனையை படைத்திருக்கிறது Asia book of record, India book of recordsல் தனிநபர் திரைப்பட முயற்சியில் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கான பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. Asia book of record, India book of records சார்பாக விவேக் கலந்துகொண்டு பிரபலங்கள் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ் சமுத்திரகனி இயக்குநர் சாமி, முன்னிலயில் வழங்கப்பட்டது.

Also Read This: பாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவாங்க போல: எங்க அண்ணன் பாடல் லிரிக் வீடியோ!

மேலும் படிக்க: Manjima Mohan: கமர்ஷியல் படத்தில் 2 ஹீரோயின்: ரூட் மாறும் விஜய் சேதுபதி?

இதையும் படிங்க: Prasanna: மீண்டும் கர்ப்பமான சினேகா: சந்தோஷத்தில் பிரசன்னா!

இயகுநர் இமயம் பாரதிராஜா...

சம்பிரதாயமாக படங்கள் பார்த்துவிட்டு இது அழகாக இருக்கிறது, அது அழகாக இருக்கிறது எனச் சொல்ல விருப்பமில்லை என அவரிடம் சொன்னேன். புதிய வார்ப்புகள் படத்தில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் திட்டியிருக்கிறேன். அவன் புதிய பாதை படத்தை எடுத்த போது நீயா நடிக்கிறாய் எனக் கேள்வி கேட்டேன்.


ஆனால் படம் வெளிவந்த போது பிரமித்து போனேன். அவன் காலப்பயணத்தில் முன் பயணிப்பவன். அவனுக்கான உயரம் வேறு, அவனுக்குரிய இடத்தை தமிழ் சினிமா அவனுக்கு தரவில்லை. இந்தப்படத்தை பார்த்து பாராட்ட வார்த்தைகளே இல்லை. நான் தனியாக கடிதம் எழுதுகிறேன் என்றேன்.

படத்தின் ஒவ்வொன்றும் அத்தனை துல்லியம் இப்படி படம் எடுக்க முடியுமா என பிரமித்துப் போனேன். உலகம் திரும்பி பார்க்கும் படைப்பை தந்திருக்கிறான் வாழ்த்துக்கள் என்றார்.


இதனையடுத்து பேசிய இயக்குநர் பார்த்திபன், பாரதிராஜா சார் தந்த அங்கீகாரம் தான் இந்தப்படத்தின் தகுதி. ஆனால் வியாபரத்தில் இங்கு இந்தப்படத்திற்கு மதிப்பில்லை. நான் கடவுளை கும்பிடுபவன். எனக்கு ரசிகர்கள் தான் கடவுள். புதிய பாதை, கதை திரைக்கதை வசனம் பட நேரங்களில் இந்த சந்தேகம் வந்தது.


ரசிகர்கள் தான் அதை வெற்றி பெறச் செய்தார்கள். இந்தப் படத்தை 30ம் தேதி வெளியிட முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கு காட்டி உங்கள் கருத்தை கேட்க ஆசை. பாரதி ராஜா சார் உண்மையை உண்மையாக பேசக்கூடியவர். அவர் சாதனைகளை இன்னும் எவரும் தொடவில்லை. எவரும் தொடமுடியாது. நான் அதை அடைய ஆசைப்படுகிறேன்.

ராம்ஜி நிறைய படத்தில் அவரை ஒளிப்பதிவு செய்யக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனால் என்னவோ இந்தப்படத்தின் கதை கேட்டவுடன் ஒத்துக்கொண்டு வந்துவிட்டார். படம் வெளிவந்த பிறகு அவர் பற்றிய பேச்சு தான் எங்கும் இருக்கும். அதே போல் தான் சந்தோஷ் நாரயணனும் அதி அற்புதமான இசையை தந்துள்ளார். இப்படம் பற்றி நிறைய பேச வேண்டும் படம் வந்த பிறகு நிறைய பேசலாம் நன்றி என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்