ஆப்நகரம்

எங்க லைஃப் பேலன்ஸா இருக்கும்: அனுஷ்கா

திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் சமநிலை இருக்க வேண்டும் என்பதில் விராட் கோலியும் தானும் கவனமாக இருக்கிறோம் என அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Sep 2018, 10:23 pm
திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் சமநிலை இருக்க வேண்டும் என்பதில் விராட் கோலியும் தானும் கவனமாக இருக்கிறோம் என அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil img_1537093508549_307


இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா.

திருமணத்துக்குப் பின் கோலி எங்கெல்லாம் போட்டிகளில் பங்கேற்கச் செல்கிறாரோ அங்கெல்லாம் அனுஷ்காவும் சென்று, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுஷ்கா சர்மா, “எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் எது முக்கியமானது என்று தெளிவான பார்வை இருக்கிறது. எங்கள் துறை சார்ந்த செயல்பாடும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்க முயற்சிக்கிறோம். இருவருமே எங்கள் துறையை மிகவும் நேசிக்கிறோம். ஆனால், இருவரும் சேர்ந்து ஏதாவது சாதிக்கவும் விரும்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

மேலும், “எங்கள் இருவருக்கும் நாங்கள் சார்ந்துள்ள துறை மட்டுமே அடையாளம் அல்ல. மற்றவர்களைப் போல நாங்களும் சாதாரணமான விஷயங்களைச் செய்வதை விரும்புகிறோம்.” என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்