ஆப்நகரம்

Sajeev Pillai : மாமாங்கம் தயாரிப்பாளருக்கே சொந்தம் - சஜீவ் பிள்ளையை கைவிட்ட நீதிமன்றம்!

கதாசிரியரும், இயக்குனருமான சஜீவ் பிள்ளை, சமீபத்தில் கோர்ட் அளித்த தீர்ப்பால் தற்போது மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறார்.

Samayam Tamil 29 Mar 2019, 4:46 pm
தமிழ் சினிமாவில் சமீப காலமாக உதவி இயக்குனர்கள் பலர் தங்களின் கதையை யாரோ திருடிவிட்டார்கள் என்ற புகார் தற்போது வரை இருந்து வருகிறது. இந்த பிரச்னை தற்போது மலையாள சினிமாவில் அரங்கேறியுள்ளது. மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான சஜீவ் பிள்ளை என்பவருக்கு புதுவிதமான சங்கடம்.
Samayam Tamil sajeev-pillai


தற்போது மம்முட்டி நடித்து வரும் ‘மாமாங்கம்’ என்கிற வரலாற்று கதையை கடந்த 12 ஆண்டுகளாக நீண்ட ஆய்வு செய்து உருவாக்கியவர் தான் இந்த சஞ்சீவ் பிள்ளை. இந்த படத்தையும் இவர் தான் இயக்க ஆரம்பித்தார். மேலும் இந்த படத்தின் கதையை அந்த தயாரிப்பாளருக்கே விற்றுவிட்டார்.

சில நாட்கள் கழிந்த நிலையில் இவர் மீது தயாரிப்பாளர் தரப்பு அதிருப்தி அடைந்து, இந்த படத்தில் இருந்து இவரை நீக்கிவிட்டு இயக்குனர் பத்மகுமார் என்பவரை வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார்கள். இது குறித்து வழக்கு தொடர்ந்த சஜீவ் பிள்ளை இந்த கதையை தன்னிடம் திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைத்தார்.

அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த கதையை முறைப்படி அவர் தயாரிப்பாளருக்கு எழுதிக் கொடுத்து விட்டதால் அவர்களுக்கே அது சொந்தம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தற்போது மிகுந்த சோகத்தில் இருக்கிறார் சஜீவ் பிள்ளை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்