ஆப்நகரம்

சென்னை சிட்டி சென்டரில் புன்னகை அரசி ஓவியா! மகிழ்ச்சி கடலில் ரசிகர்கள்!

ஓவியாவை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

TNN 7 Aug 2017, 12:58 am
ஓவியாவை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Samayam Tamil oviya in chennai city center fans took selfie with her
சென்னை சிட்டி சென்டரில் புன்னகை அரசி ஓவியா! மகிழ்ச்சி கடலில் ரசிகர்கள்!


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போதும் ஆரவ் சீக்கிரம் வா! உனக்காக நான் காத்துக்கொண்டிருப்பேன் என்று தெரிவித்தார். இந்நிலையில், சென்னை சிட்டி சென்டருக்கு வந்த ஓவியாவைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது அனைவரிடமும் சகஜமாக பேசிய ஓவியாவிடம் ஆரவ் குறித்த காதல் பற்றி கேட்டுள்ளார். அதற்கு புன்னகையுடன் தான் இன்னமும் ஆரவ்வை உண்மையாக காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சிட்டி சென்டருக்கு சென்ற அவரிடம் ஒரு நடிகை என்றோ, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் என்றோ ஒரு சிறிய பந்தா கூட இல்லாமல் எப்போதும் போல தனக்கே உரிய புன்னகையுடன் ரசிகர்களிடம் நடந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்