ஆப்நகரம்

பிர்சா முண்டாவின் வாழ்க்கையை படமாக்கும் பா.இரஞ்சித்

இந்தியாவின் முதல் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழக்கையை மையப்படுத்தி பா. ரஞ்சித் படம் இயக்கவுள்ளார்.

Samayam Tamil 14 Nov 2018, 2:09 pm
இந்தியாவின் முதல் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழக்கையை மையப்படுத்தி பா. ரஞ்சித் படம் இயக்கவுள்ளார்.
Samayam Tamil birsa-munda-647_060916121229


ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கிவர் பா.ரஞ்சித். முன்னதாக அட்டகத்தி, மெட்ராஸ்முதலான படங்களை இயக்கியிருந்தார். தற்போது தனதுஅடுத்த படத்துக்கான கதை விவாத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் இந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. தற்போதுஇதற்கான முதற்கட்ட பணிகளை தீவிரப்படுத்திஇருக்கிறார் பா. ரஞ்சித். இப்படம் ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக போர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

இதற்காக வட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று தகவல்களை சேகரித்து வருகிறார் பா. இரஞ்சித். 2019ம் ஆண்டு மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’பியாண்ட் த க்ளவுட்ஸ்’ திரைப்படம் உலக அளவில் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்