ஆப்நகரம்

பாலிவுட்டில் பா.ரஞ்சித்; முதல் படத்திலேயே ஆச்சரியமூட்டும் கதை!

பா.ரஞ்சித் விரைவில் இந்திப் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 2 Aug 2018, 5:44 pm
சென்னை: பா.ரஞ்சித் விரைவில் இந்திப் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil Pa Ranjith


அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா என தலித்களின் வாழ்வியலை அழகுற படமாக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். அடித்தட்டு சமூகம் படிப்படியாக உயரும் என்றும், அவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது என்று அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இவரது காலா படம், பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றது. நிலம் சார்ந்த அரசியலை, அது சார்ந்த மக்களை உலகிற்கு எடுத்துரைத்தார். இந்நிலையில் இந்தியில் நேரடியாக ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவான ‘பேயாண்ட் தி க்ளவுட்ஸ்’(Beyond the Clouds) என்ற படத்தை ஷரீன் மத்ரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் தயாரித்திருந்தனர்.

இந்த தயாரிப்பாளர்கள் தான், பா.ரஞ்சித் இயக்கும் முதல் பாலிவுட் படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pa.Ranjith will direct Hindi film soon.

அடுத்த செய்தி

டிரெண்டிங்