ஆப்நகரம்

வித்தியாசமா இருக்கே: பா.ரஞ்சித்-ஆர்யா பட டைட்டில் இது தானா?

பா.ரஞ்சித்- ஆர்யா காம்போவில் உருவாக்கவுள்ள படத்தின் டைட்டில் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 18 Sep 2019, 5:41 pm
அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். வெறும் ஒரு சுவரை அடிப்படியாக வைத்து அவர் உருவாக்கிய அந்த படம் அனைவரையும் கவர்ந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டு முறை ரஜினியை வைத்து
Samayam Tamil பா.ரஞ்சித்


Bigg Boss கவின் படும் கஷ்டத்தை பார்த்து ரேஷ்மாவுக்கு இதயமே நொறுங்கிடுச்சாம் படம் இயக்கினார்.

இயக்குநராக இருந்த அவர் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தைத் தயாரித்தார். அந்த படம் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக மாறியுள்ளார். அவர் தற்போது தனது அடுத்த படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கவுள்ளாராம்.

இந்த படம் வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து, த்ரில்லர் களத்தில் உருவாக்கவுள்ளாராம். இதில் ஆர்யாவுடன் இணைந்து சத்யராஜ், தினேஷ், மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

இப்போ சொல்ல வருவது என்னவென்றால் இந்த படத்திற்கு ‘சல்பேட்டா பரம்பரை’ என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரஞ்சித் ரசிகர்கள் டைட்டில் ரொம்ப வித்தியாசமா இருக்கே என்று தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் படத்தின் மற்ற அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்