ஆப்நகரம்

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள இரண்டாவது படத்தின் பெயா் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Dec 2018, 7:26 pm
பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது.
Samayam Tamil Kadaisi Gundu


இயக்குநா் பா.ரஞ்சித் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளாா். ரஞ்சித் இயக்கத்தையும் கடந்து நீலம் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் ஜாதிய ரீதியிலான பிரச்சினைகளை மையப்படுத்தி அண்மையில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை நீலம் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது. அப்படம் மிகப்பெரிய வெற்றியையும் ஈட்டித்தந்தது.

இந்நிலையில் நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் அறிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி புதிய படத்திற்கு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதியன் ஆதிரை எழுதி, இயக்கும் இப்படத்தில் தினேஷ் நடிக்க உள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்