ஆப்நகரம்

தமிழத்தில் பத்மாவதி படம் திரையிட்டால் திரையரங்கை முற்றுகையிடுவோம்!

தமிழகத்தில் பத்மாவதி படம், வெளியிடப்படும் திரையரங்குகளை, முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என சிவசேனை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

TNN & Agencies 22 Nov 2017, 11:10 am
தமிழகத்தில் பத்மாவதி படம், வெளியிடப்படும் திரையரங்குகளை, முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என சிவசேனை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil padmavati movie screened in tamil nadu theater will be besiege said by shiv sena
தமிழத்தில் பத்மாவதி படம் திரையிட்டால் திரையரங்கை முற்றுகையிடுவோம்!


சிவசேனை அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் புலவஞ்சி சி.பி. போஸ் கூறியதாவது; பத்மாவதி படத்தைத் திரையிட சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் இந்து அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, இப்படத்தைத் திரையிட தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டும்.

தமிழகத்தில் இப்படத்தை எந்தத் திரையரங்கில் வெளியிட்டாலும், இந்து அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இந்து மத கலாசாரத்துக்கு எதிராக இப்படம் உள்ளது. நம் மண்ணின் பாரம்பரியத்தைத் தவறாகத் திரித்து இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

எனவே, இப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தஞ்சாவூரில் வரும் டிசம்பர் 3-ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு சிவசேனை அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் புலவஞ்சி சி.பி. போஸ் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்